வங்கிகளின் சேவை நேரத்தில் மாற்றம்

அரச மற்றும் தனியார் வங்கிகள் தமது சேவை நேரத்தில் மாற்றம் ஏற்படுத்தியுள்ளன. எரிபொருள் நெருக்கடி காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை வங்கி ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி, அரச மற்றும் தனியார் வங்கிகளில் வார நாட்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை மாத்திரமே கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படுமென குறித்த சங்கத்தின் தலைவர் சன்ன திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles