வெற்றிவாகை சூடப்போகும் அணி எது? இன்று பலப்பரீட்சை!

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவது ஒருநாள் ODI போட்டி இன்று (27) நடைபெறுகின்றது.

3 ஒருநாள் போட்டிகளைக் கொண்ட தொடரில், இன்றைய இறுதி ஆட்டதில் வெல்லும் அணியே தொடரில் வெற்றிவாகை சூடும்.

கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இலங்கை நேரப்படி போட்டி பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமாகும்.

முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணியும், இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணியும் வெற்றிபெற்றன.

இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் 30 ஆம் திகதி ஆரம்பமாகின்றது.

Related Articles

Latest Articles