வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி நாட்டு மக்களிடம் மன்னிப்புகோர வேண்டும், அவ்வாறு இல்லாவிட்டால் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” ஐ.நா. தொடருக்கு சென்றிருந்த இலங்கை குழாமும் வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரியின் மகனும் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார். தனக்கு வேலை அதிகம், அதனால்தான் தன்னார்வ அடிப்படையில் மகனை இணைத்துக்கொண்டார் என்பது உட்பட பல கதைகளை தற்போது அலிசப்ரி கூறிவருகின்றார். இவ்வாறு கருத்துகளை வெளியிடுவதைவிட தவறை ஏற்றுக்கொண்டு அவர் மன்னிப்பு கோர வேண்டும்.
தனக்கு வேலைபழு அதிகம் என்றால் அமைச்சு பதவியை துறந்து அதனை பொருத்தமான ஒருவரிடம் கையளிக்க வேண்டும்.
ராஜபக்சக்களுக்கு எதிரான வழக்குகளில் ஆஜரானதால்தான் அலிசப்ரிக்கு தேசிய பட்டியல் வழங்கப்பட்டது. ” – என்றார் மேர்வின் சில்வா.