ஹட்டன் , ஹிஜ்ஜிராபுர பகுதியில் வீடொன்றினுள் இறந்தநிலையில் ஆணொருவரின் சடலம் இன்று (12.10.2020) மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர். வீட்டு உரிமையாளர் வழங்கி தகவலினை அடுத்தே குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மீட்கப்பட்டவர் பழணியாண்டி, வயது 60 மதிக்கதக்கவர் என்றும் இவர் ஒரு ஆட்டோ ஓட்டுநனர் என்றும் ன்று நாளுக்கு முன் இறந்து இருக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
தனது வீட்டுக்குள் முன்னுள்ள வீதியில் கடந்த 2 நாட்களுக்கு முன் குறித்த நபர் முச்சக்கர வண்டியினை நிறுத்தி விட்டு சென்ற நிலையில் திரும்பி தனது முச்சக்கர வண்டியினை எடுக்காததால் சந்தேகம் கொண்ட வீட்டு உரிமையாளர் அவரின் குடும்பத்தினருக்கு அறிவித்துள்ளார்.
அதனை தொடர்ந்து அவரின் உறவினர்கள் இவர் பற்றி தகவல் எதுவும் தெரியாது என தெரிவித்ததனை அடுத்து உரிமையாளர் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.அதனை தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுத்த பொலிஸார் அவர் நிர்வாணமாக வீட்டினுள் இறந்து கிடப்பதாக தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் கூலிக்காக இந்த வீட்டில் தனது 2வது முறை திருமணமான மனைவியுடன் வாழ்ந்து வந்தாகவும் 2 நாட்களுக்கு முன் அவரின் மனைவி வீட்டை விட்டு சென்றதாகவும் அதன் பின் குறித்த நபரையும் காணவில்லை. என்றும் மின்சார பட்டியில் மற்றும் தபால் காரர்கள் வந்து கதவு தட்டிய போதும் திறக்கப்படவில்லை என்றும் அயலவர்கள் தெரிவித்தனர்.
குறித்த நபர் நோய்வாய்க் காரணமாக இறந்தாரா அல்லது வேறு ஏதும் காரணங்களால் இறந்தரா என்பது தொடர்பாக பல்வேறு கோணங்களில் அட்டன் கைரேகை அடையாளப் பிரிவு மற்றும் அட்டன் பொலிஸார் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
க.கிசாந்தன்