நேற்று இரவு முதல் பெய்துவரும் கடும்மழையால் ஹட்டன் கொழும்பு பிரதான வீதி கிதுல்கல பகுதியில் பாரிய மரமொன்று இன்று காலை 5.30மணியளவில் விழுந்து மின்கம்பியும் சேதமடைந்ததால் குறித்தப்பாதையுடனான போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது.

இதனால் பிரதான பாதையில் வாகன நெரிசல் ஏற்பட்டத்துடன் காலைவேளை தொழிலுக்கு செல்வோர் அசௌகரியத்திற்கு உள்ளாயினர்.










