ஹப்புத்தளை லயன் குடியிருப்பில் தீ விபத்து – பொருட்கள் எரிந்து நாசம்!

ஹப்புத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிடரத்மலை மேல் பிரிவில், லயன் குடியிருப்பொன்றில் நேற்றிரவு தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இதில் குறித்த வீடு முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதுடன், பொருட்களும் தீக்கிரையாகியுள்ளன.

எவருக்கும் உயிராபத்து ஏற்படவில்லை. ஏனைய வீடுகளுக்கும் தீ பரவாமல், கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

மின் கசிவினால் இத்தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. ஹப்புத்தளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

ராமு தனராஜா

Related Articles

Latest Articles