கே.சுந்தரலிங்கம்
முன்னாள் அமைச்சர் ரிசாட் பதூர்தீன் அவர்களின் வீட்டு வேலைக்கு சென்று எரிகாயங்களுடன் மிகவும் மர்மமான முறையில் கடந்த 15 திகதி உயிரிழந்து சிறுமிக்கு நீதி கோரி நாடெங்கிலும் பல்வேறு ஆர்ப்பாட்டங்களும்,கவனயீர்ப்பு போராட்டங்களும் அஞ்சலி நிகழ்வுகள் தொடர்நதும் நடைபெற்று வரும் நிலையில்.
ஜூட்குமார் ஹிசாலினிக்கு நிதி கோரி இன்று கொட்டகலை மேபீலு;டு; சாமஜட்டன் பொது மக்கள் மற்றும் இளைஞர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றினை ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றினை (02 ); ம் திகதி மேற்கொண்டனர்.
சுகாதார பொறிமுறைக்கமைய கொட்டகலை மேபீல்ட் சந்தி வரை பேரணியாக வருகை தந்து மேபீல்ட் சந்தியில் பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் இடுபட்ட அதனை தொடர்ந்தும் சாமஸ்ட்டன் வரை பேரணியாக சென்றனர்.
மேபீல்ட் சந்தியில் நடைபெற்ற குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஆர்ப்பாட்டகார்கள் சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்வதை தடுப்போம்,உரிமைக்காக போராடுவோம்; மலையக சிறுவர்களை வேலைக்கு அமர்த்தாதே’ சிறவர்களின் எதிர்காலத்தை பாதுகாப்போம் நீதிக்காக போராடுவோம் குற்றவாளிகள் சட்டத்தின் முன்நிறுத்த வேண்டும்.ஹிசாலினிக்கு நீதி வேண்டும் போன்ற பதாதைகளை காட்சிப்படுத்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனை தொடர்ந்து கவனயீர்ப்பு போராட்டக்காரர்கள் வேண்டும் வேண்டும் ஹிசாலினிக்கு நீதி வேண்டும், கைது செய் கைது செய் குற்றவாளியை கைது செய் விசாரணைகள் துரிமமாக்க வேண்டும், போன்ற கோசங்களை எழுப்பி கவனயீர்ப்பியவாறு பேரணியாக சென்றனர்.
கொட்டகலை எலிபீல்ட் மற்றம் சாமஸட்டன் பெண்கள் மற்றும் சிறுவர்கள் பொது மக்கள் என 200 இற்கும்; மேற்பட்டவர்கள் இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் கலந்து கொண்டனர்.