‘ஹெலிகொப்டர் விபத்து – இந்திய முப்படைகளின் தளபதி பலி!

ஹெலிகொப்டர் விபத்தில் இந்தியாவின் முப்படை தலைமை தளபதி உயிரிழந்ததுள்ளமை தொடர்பில் அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வேதனை தெரிவித்தார்.

குன்னூர் அருகே நிகழ்ந்த இராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய விமானப்படை உறுதிபடுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள வெலிங்டன் ராணுவ கல்லூரியில் உரை நிகழ்த்த முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் பயணம் மேற்கொண்டதாக விமானப்படை ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த எதிர்பாராத விபத்தில் பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் 11 பேர் உயிரிழந்து விட்டதாக விமானப்படை குறிப்பிட்டுள்ளது.

Related Articles

Latest Articles