மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தனி நாடு கோரவில்லை. ஆயிரம் ரூபா சம்பளத்தை வழங்குமாறுதான் கோருகின்றனர். எனவே, அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் – என்று பதுளை மாவட்ட எம்.பி. வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற ஜனாதிபதியின் கொள்கைவிளக்கஉரைமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.
” பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட்சம்பளமாக ஆயிரம் ரூபா பெற்றுக்கொடுக்கப்படும் என ஜனாதிபதி உறுதியளித்தார். அந்த உறுதிமொழி நிறைவேற்றப்படவில்லை. ஆயிரம் ரூபா எங்கே? எனவே, இனியும் இழுத்தடிக்காமல் ஆயிரம் ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்கவும்.” – என்றார்.