2ஆவது வெற்றியை பதிவு செய்யுமா சென்னை?

ஐ.பி.எல். தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெறும் 7-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ், முன்னாள் சாம்பியனான குஜராத் டைட்டன்சை எதிர்கொள்கிறது.

நடப்பு சாம்பியன் சென்னை அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்க;ரு அணியை வீழ்த்தியது. அந்த ஆட்டத்தில் 174 ஓட்டங்கள் இலக்கை 8 பந்துகள் மீதம் வைத்து சென்னை அணி எட்டிப்பிடித்து அசத்தியது.

சென்னை அணியில் பேட்டிங்கில் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், ரச்சின் ரவீந்திரா, ரஹானே, டேரில் மிட்செல், ஷிவம் துபேவும், பந்து வீச்சில் கடந்த ஆட்டத்தில் 4 விக்கெட் வீழ்த்தி அசத்திய முஸ்தாபிஜூர் ரகுமான், தீபக் சாஹர், தீக்ஷனா, ரவீந்திர ஜடேஜாவும் நல்ல நிலையில் உள்ளனர்.
பெங்களுருவுக்கு எதிராக விக்கெட் இன்றி 47 ரன்கள் கசிய விட்ட வேகப்பந்து வீச்சாளர் துஷர் தேஷ்பாண்டே முன்னேற்றம் கண்டால் பந்து வீச்சு மேலும் வலுப்பெறும்.

தசைப்பிடிப்பு காயத்தில் இருந்து மீண்ட இலங்கை வேகப்பந்து வீச்சாளர் பத்திரன சென்னை அணியினருடன் இணைந்து இருக்கிறார். அவர் இம்பேக்ட் வீரராக விளையாட வாய்ப்புள்ளது. உள்ளூரில் நடந்த முதல் ஆட்டத்தில் வெற்றி கண்டு அமர்க்களமாக தொடங்கி இருக்கும் சென்னை அணி அந்த உத்வேகத்தை தொடரும் முனைப்புடன் களம் இறங்குகிறது.

இதேபோல் குஜராத் அணி தனது சொந்த மண்ணில் நடந்த முதலாவது ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்சை 6 ரன் வித்தியாசத்தில் வீழ்த்திய உற்சாகத்துடன் இந்த போட்டியில் கால் பதிக்கிறது.

Related Articles

Latest Articles