பதுளை – பசறை வீதியில் பதுளை முத்தியங்கனை விகாரைக்கு அருகாமையில் காரொன்று வேக கட்டுப்பாட்டை இழந்து. நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 7 மோட்டார் சைக்கிளில் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்து பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்து இன்று ( 11) முற்பகல் 10 .30 . மணியளவில் இடம்பெற்றுள்ளது.
விபத்தை தொடர்ந்து காரின் சாரதியை பதுளை போக்குவரத்து பொலிஸார் கைது செய்துள்ளனர். காருக்கும், மோட்டார் சைக்கிள்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.
விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ராமு தனராஜ்