நாட்டில் நேற்று மாத்திரம் 11 ஆயிரத்து 316 பிசிஆர் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளது. நாட்டில் இதுவரை 5 லட்சத்து 68 ஆயிரத்து 774 பிசிஆர் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
முப்படையினரால் நிர்வகிக்கப்படும் 30 தனிமைப்படுத்தல் மையங்களில் 2 ஆயிரத்து 420 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதுவரையில் 63 ஆயிரத்து 644 பேர் தனிமைப்படுத்தலை நிறைவுசெய்துகொண்டு வெளியேறியுள்ளனர்.
அதேவேளை, இரண்டாவது அலைமூலம் இதுவரை 9 ஆயிரத்து 96 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.
இலங்கையில் கொரோனா தொற்றார்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 570 ஆக அதிகரித்துள்ளது. 6 ஆயிரத்து 623 பேர் குணமடைந்துள்ளனர். 29 பேர் பலியாகியுள்ளனர். 5 ஆயிரத்து 918 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது.