13 மில்லியன் ஸ்புட்னிக், 5 மில்லியன் பைசர் தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய ஏற்பாடு

நாட்டில் கொவிட் – 19 தடுப்பூசியை பெறுவதற்கு ஏற்புடைய அனைவருக்கும் தடுப்பூசி ஏற்றுவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் – என்று கொரோனா ஒழிப்பு தொடர்பான செயற்பாட்டு மையத்தின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா   தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“எஸ்ட்ரா செனிக்கா தடுப்பூசியின் முதலாவது டோஸ் ஏற்றப்பட்டவர்களுக்கு, 2ஆவது டோஸை வழங்கவேண்டியுள்ளது. அதற்கு தேவையான தடுப்பூசியை பிரிதொரு நாட்டிலிருந்து வாங்குவதற்கான இராஜதந்திர மட்டத்திலான முயற்சிகள் தற்போது இடம்பெற்றுவருகின்றன. லலித் வீரதுங்க தலைமையிலான குழுவினர் இவ்விவகாரத்தைக் கையாள்கின்றனர்.

அத்துடன், 13 மில்லியன் ஸ்புட்னிக் தடுப்பூசிகள் ரஷ்யாவில் இருந்து கொள்வனவு செய்யப்படவுள்ளன. இன்னும் ஒரிரு நாட்களில் 6 லட்சம் தடுப்பூசிகள் வரவுள்ளன.

அதேபோல் ஜுன் மாத இறுதியில் அல்லது ஜுலை மாத ஆரம்பத்தில் 9 லட்சம் பைசர் என்ற தடுப்பூசிகள் கொண்டுவரப்படும். இத்தடுப்பூசியை ஒரு தடவை மட்டும் செலுத்தினால் போதுமானதாக இருக்கும். இத்தடுப்பூசி வர்க்கத்திலும் 5 மில்லியன்வரை கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனவே, தடுப்பூசி பெற்றுக்கொள்ள வேண்டிய அனைவருக்கும் அதனை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.” – என்றார்.

Related Articles

Latest Articles