அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச்சட்டம் நிச்சயம் நீக்கப்படும் என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஸில் ராஜபக்ச தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
” புதியதொரு அரசியலமைப்பை உருவாக்குவதற்கு நாட்டு மக்கள் ஆணை வழங்கியுள்ளனர். அதனை இயற்றுவதற்கு முன்னர் நிச்சயம் 19 ஐ நீக்குவோம். அதன்பின்னர் மக்களின் ஒத்துழைப்புடன் நாட்டுக்கு தேவையான அரசியலமைப்பு உருவாக்கப்படும்.
எமது அரசாங்கம்மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை வீணடிக்கப்படமாட்டாது. வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும். கடந்தகால தவறுகளை திருத்திக்கொண்டு முன்நோக்கி பயணிப்போம். நாட்டை கட்டியழுப்புவதே எமது பிரதான நோக்கம். இதில் அனைவரும் இலங்கையராக இணையவேண்டும்.” – என்றார்.