2ஆவது அலைமூலம் இதுவரை 8,926 பேருக்கு கொரோனா தொற்று!

நாட்டில் மேலும் 213 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.

இதன்படி இலங்கையில் கொரோனா 2ஆவது அலைமூலம் பதிவான மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 926 ஆக அதிகரித்துள்ளது.

இலங்கையில் கொரோனா தொற்றார்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 400 ஆக அதிகரித்துள்ளது. 6 ஆயிரத்து 623 பேர் குணமடைந்துள்ளனர். 29 பேர் பலியாகியுள்ளனர். 5 ஆயிரத்து 753 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது.

Related Articles

Latest Articles