நாட்டில் மேலும் 213 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.
இதன்படி இலங்கையில் கொரோனா 2ஆவது அலைமூலம் பதிவான மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 926 ஆக அதிகரித்துள்ளது.
இலங்கையில் கொரோனா தொற்றார்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 400 ஆக அதிகரித்துள்ளது. 6 ஆயிரத்து 623 பேர் குணமடைந்துள்ளனர். 29 பேர் பலியாகியுள்ளனர். 5 ஆயிரத்து 753 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது.