2024 – வெற்றி கணக்கை ஆரம்பிக்குமா இலங்கை?

இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறவுள்ளது.

கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் பிற்பகல் 2.30 மணிக்கு போட்டி ஆரம்பமாகவுள்ளது.

இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஜனவரி 6 ஆம் திகதி நடைபெற்றது. எனினும், மழை காரணமாக போட்டி கைவிடப்பட்டது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில், 9 விக்கெட்டுகளை இழந்து 273 ஓட்டங்களைப் பெற்றது.

பின்னர் 274 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய சிப்பாப்வே அணி 4 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 12 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது மழை குறுக்கிட்டதால் போட்டி நிறுத்தப்பட்டது.

Related Articles

Latest Articles