’21/4 தாக்குதல் குறித்து விசாரணை அறிக்கையின் பிரதி வேண்டும்’ – ஜனாதிபதியிடம் பேராயர் கோரிக்கை

“21/4 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ள இறுதி விசாரணை அறிக்கையின் பிரதியொன்றை வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கேட்டுக்கொள்கின்றேன்.”

இவ்வாறு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் கோரிக்கை விடுத்தார்.

அத்துடன், குறித்த தாக்குதல்களில் உயிரிழந்த, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கடைக்கவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

அதேவேளை, குறித்த விசாரணை அறிக்கையை பாராளுமன்றத்தில் முன்வைக்குமாறு எதிரணிகள் கோரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles