உத்தேச 22 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது
நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போதே, இதற்கான அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதிக்கான அதிகாரங்களைக் குறைத்து, நாடாளுமன்றத்திற்கு அதிக பலத்தினை வழங்கும் வகையில் குறித்த அரசியலமைப்பு சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.










