3 சதாப்தங்களுக்கு பிறகு தாய் நாடு திரும்பினர் முருகன் , ராபர்ட் பயஸ் , ஜெயக்குமார்!

இந்தியாவில் இருந்து இன்று தாயகம் திரும்பிய முருகன் , ராபர்ட் பயஸ் , ஜெயக்குமார் ஆகிய மூவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விசாரணைகளின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலைக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு 33 ஆண்டுகள் வரை சிறையிலிருந்து கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் விடுவிக்கப்பட்டு திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முருகன் ரொபேர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் இன்று காலை இலங்கையை வந்தடைந்தனர்.

திருச்சி சிறப்பு முகாமிலிருந்து நேற்று இரவு 11.15 மணிக்கு சென்னைக்கு காவல்துறை வாகனம் மூலம் அழைத்து வரப்பட்டனர்.

இதன்படி இன்று முற்பகல் 10 மணியளவில் சென்னை விமான நிலையத்திலிருந்து அவர்கள் இலங்கை நோக்கி பயணித்தனர். மூவரும் முற்பகல் 11.30 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

அவர்களுக்கு இலங்கைக்கு செல்வதற்கு மாத்திரமே இந்தியாவிலுள்ள இலங்கை துணை உயர்ஸ்தானிகரகம் கடவுச்சீட்டு வழங்கியுள்ளதாகவும் சட்டத்தரணி புகழேந்தி பாண்டியன் தெரிவித்தார்.

விமான நிலையத்தில் விசாரணைகளின் பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்களை குடும்ப உறவினர்களும், அரசியல் பிரமுகர்களும் வரவேற்றனர். தற்போது தமது ஊர்களை நோக்கி புறப்படுகின்றனர்.

Related Articles

Latest Articles