8 லட்சம் ரூபா பெறுமதியான கஞ்சாவுடன் மன்னாரில் ஒருவர் கைது!

குற்றப் புலனாய்வுப் பகுதியினருக்குக் கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலைத் தொடர்ந்து மன்னார் நகரில் சுமார் எட்டு இலட்சம் பெறுமதியான கேரளக் கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு மன்னார் நகரில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மன்னார் இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் திருகோணமலைப் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள் இணைந்து மன்னார் நகரில் மேற்கொண்ட சோதனையில் கற்பிட்டி பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய ஒருவர்  கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் சுமார் எட்டு இலட்சம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவை மன்னார் நகர் பகுதியில் தன் வசம் வைத்துக்கொண்டு விற்பனை செய்வதற்காக வைத்திருந்தபோதே கைது செய்யப்பட்டுள்ளார்.

மேற்படி சந்தேகநபர், அவரிடமிருந்த கேரள கஞ்சாவுடன் மேலதிக விசாரணைகளுக்காக மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர் மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles