90 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீடுகள் சேதம்!

டித்வா புயல் மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் இலங்கையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 639 ஆக அதிகரித்துள்ளது என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

203 பேர் காணாமல்போயுள்ளனர்.

5 ஆயிரத்து 350 வீடுகள் முழமையாகவும், 86 ஆயிரத்து 882 வீடுகள் பகுதியளவும் சேதம் அடைந்துள்ளன என்று மேற்படி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

27 ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்கள் இடைத்தங்கல் முகாம்களில் தொடர்ந்து தங்கவைக்கப்பட்டுள்ளன.

மண்சரிவு மற்றும் வெள்ளத்தால் சேதமடைந்த வீதிகளை புனரமைப்பதற்குரிய நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்றுவருகின்றன. மத்திய மலை நாட்டில் பிரதான வீதிகளில் சரிந்துள்ள மண்மேடுகளை அகற்றும் பணியும் இடம்பெற்றுவருகின்றது.

Related Articles

Latest Articles