இபோச பஸ் விபத்து: மூவர் காயம்!

தெஹியத்தகண்டி – மஹியங்கனை வீதியின் மில்லத்தேவ பகுதியில் இபோச பஸ்ஸொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் மூவர் காயம் அடைந்துள்ளனர்.

மஹியங்கனை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த பஸ்ஸே இவ்வாறு வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 5 வயது சிறுவர் உட்பட மேலும் மூவர் காயம் அடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்கள் கிராதுருகொட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கிராதுருகொட்ட பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சுதேஷ் சதுரங்க தலைமையில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.

ராமு தனராஜா

Related Articles

Latest Articles