தோட்டத் தொழிலாளர்களுக்கு மீண்டும் ஏமாற்றம்!

“ தோட்டத் தொழிலாளர்களை ஏமாற்றியுள்ள சம்பள உடன்படிக்கையை கடுமையாக எதிர்க்கின்றோம்.” – என்று அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் தெரிவித்தார்.

சம்பள நிர்ணயச் சபைக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ இன்று (12) சம்பள நிர்ணயச் சபையில் தோட்டத் தொழிலாளர்களின் நாள் சம்பளம் தொடர்பில் முடிவெடுப்பதற்கான கூட்டம் கூட்டப்பட்டது. இந்தக் கூட்டத்தில் 10 தொழிற்சங்கங்களும், முதலாளிமார் சம்மேளனத்தின் ஊடகப் பேச்சாளர் ரொஷான் ராஜதுரை உள்ளிட்ட கம்பனிகளின் 07 பிரதிநிதிகளும், அரச அதிகாரிகள் 03 பேரும் கலந்துகொண்டனர்.

இதன்போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் யூ.என்.பி.யின் தொழிற்சங்கமான தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் தோட்டத் தொழிலாளர்களின் நாள் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பான பிரேரணையை கொண்டுவந்தன.

அதாவது, அந்தப் பிரேரணையில் தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளமாக 1350 ரூபாவை வழங்கவேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அத்துடன், மேலதிக கொடுப்பனவாக 350 ரூபாவை வழங்கவேண்டும் என்றும் முன்வைக்கப்பட்டிருந்தது.

இதன்போது, கம்பனிகளும் தங்களது 5 கோரிக்கைகளை முன்வைத்தன.
அவர்களது முதலாவது கோரிக்கை, “தோட்டத் தொழிலாளர்கள் சம்பள உயர்வை கேட்டு 03 வருடங்களுக்கு போராட்டமோ அல்லது வேறு எந்த நடவடிக்கையையோ முன்னெடுக்கக் கூடாது.” என்பதாகும்.
இரண்டாவது, “ ஒரு கிலோ கிராம் கொழுந்துக்கு 50 ரூபா கொடுக்கப்படும்.” என்பதாகும்.

மூன்றாவதாக, ”மேலதிக கொடுப்பனவு 350 ரூபாவாகும். ஆகவே, அந்த 350 ரூபாவுக்கான கொழுந்தை மாத்திரம் தான் பறிக்க வேண்டும்” என்பதாகும்.
இதுகுறித்து காரசாரமான வாதவிவாதங்கள் நடைபெற்றன. 1350 ரூபாவுக்கு ஆதரவாக 11 பேரும் எதிராக 03 பேரும் வாக்களித்தோம்.

மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) பெருந்தோட்ட தொழிற்சங்கமான அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் எமது எதிர்ப்பை வெளிப்படுத்தினோம். செங்கொடிச் சங்கத்தின் சார்பாக 02 பேர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆகவே, மேலதிமான 8 வாக்குகளால் பிரேரணை நிறைவேற்றப்பட்டது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு சாதகமாக செயற்பட்ட தொழிற்சங்கங்களும் கம்பனிகளும் அரச அதிகாரிகளும் தோட்டத் தொழிலாளர்ளை ஏமாற்றியுள்ளதுடன், அவர்களது போராட்டங்களையும், உரிமைகளையும் காட்டிக்கொடுத்துள்ளனர். இதனை நாங்கள் வன்மையாக்க கண்டிக்கிறோம்.” – என்றார்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles