ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட வேட்பாளரான முத்தையா பிரபுவுக்கும், தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான பழனி திகாம்பரத்துக்குமிடையிலான சொற்போர் உக்கிரமடைந்துள்ளது.
பிரச்சார மேடைகளில் இருவரும் சரமாரியாக சொற்கணைகளைத் தொடுத்துவருகின்றனர்.
முத்தையா பிரபுவை, பரசூட் வேட்பாளர் என்றும், பெட், போல் மற்றும் பிஸ்கட்டுகளை வழங்கி வாக்கு கேட்கும் அவருக்கு, மக்கள் வாக்களிக்ககூடாது என திகாம்பரம் பிரச்சாரம் முன்னெடுத்துவருகிறார்.
மறுபுறத்தில் திகாம்பரம் அமைச்சராக இருந்தபோது ஆமை வேகத்திலேயே வீட்டுத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது எனவும், மலையக மக்களுக்காக அவர் ஒன்றும் செய்யவில்லை எனவும் முத்தையா பிரபு பதிலடி கொடுத்துவருகிறார்.
இந்நிலையில் இன்று நடைபெற்ற பிரச்சாரக்கூட்டத்தில் கருத்து வெளியிட்ட முத்தையா பிரபு,
” நான் பெட்,போல் வழங்கி பிரச்சாரம் முன்னெடுப்பதற்கா திகாம்பரம் கூறுகிறார். அவர்தான் நுவரெலியா மாவட்ட கிரிக்கெட் சபையின் தலைவராக இருக்கிறார். அவர் ஒன்றும் செய்யாததாலேயே எம்மால் செய்யவேண்டியுள்ளது.” – என்றார்.