மாகாணசபைத் தேர்தல் குறித்து ஆராய கட்சி தலைவர்கள் கூட்டம்!

மாகாணசபைத் தேர்தல் குறித்து ஆராய்வதற்கு விரைவில் கட்சி தலைவர்கள் கூட்டம் நடத்தப்படும் என்று அமைச்சரவை பேச்சாளரும், ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதன்போது கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

” மாகாணசபைத் தேர்தல் பற்றி அமைச்சரவைக் கூட்டத்தில் ஆராயப்பட்டது. அதனை நடத்தும் விதம் பற்றி நீண்டகாலம் விவாதம் நடைபெற்றுவருகின்றது. எனவே, கட்சி தலைவர்கள் கூட்டத்தை நடத்தி, அதன்போது எட்டப்படும் இணக்கப்பாட்டின் அடிப்படையில் மீண்டுமொரு அமைச்சரவை பத்திரத்தை முன்வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.

அதன்பின்னர் அந்த யோசனை குறித்த ஆராயப்பட்டு, இறுதி முடிவு எடுக்கப்படும். எனினும், நல்லாட்சிபோல் தேர்தலை ஒத்திவைக்கும் திட்டம் எமது அரசாங்கத்துக்கு கிடையாது. மக்களின் நன்மைகளுக்காகவே மூன்றிலிரண்டு பெரும்பான்மைபலம் பயன்படுத்தப்படும்.” – என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles