தேசிய பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் எச்.எஸ். துய்யகொந்த தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” தேசிய பாதுகாப்புக்கு பிரச்சினை ஏதும் இல்லை. பாதாள குழுக்களை பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு கட்டுப்படுத்திவருகின்றது. இராணுவ ஒத்துழைப்பு தேவைப்படும் பட்சத்தில் சட்ட நியதிகளுக்கு உட்பட்ட வகையில் அதற்கு தேவையான ஒத்துழைப்புகள் வழங்கப்படும்.
எனவே, தேசிய பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை. பாதாள குழுக்களுக்கு அரசியல் பாதுகாப்பு தற்போது இல்லாமல்போயுள்ளது. இதனால் அக்குழுக்கள் குழப்பமடைந்துள்ளன. பாதாள குழு உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுவருகின்றனர். பாதாள குழுக்கள் ஒடுக்கப்படும்.” – என்றார்.
