குளவிக்கொட்டுக்கு இலக்காகி நபரொருவர் பலி! ஓல்ட்டன் தோட்டப்பகுதியில் துயரம்!!

குளவிக்கொட்டுக்கு இலக்காகி இளைஞர் ஒருவர் இன்று மதியம் உயிரிழந்துள்ளார்.

சாமிமலை, ஓல்ட்டன் தோட்டப் பகுதியை சேர்ந்த 36 வயது இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவரது உடலம் டிக்கோயா கிளங்கன், வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மஸ்கெலியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

Related Articles

Latest Articles