எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மூன்று நாள்கள் அதிகாரபூர்வ பயணமாக இன்று காலை டில்லி நோக்கி சென்றார்.
இந்திய வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட உயர் மட்ட அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளைச் சந்தித்து இருதரப்பு நலன் சார்ந்த விடயங்கள் பற்றி இவ்விஜயத்தின்போது கலந்துரையாடுவார்.
இந்திய எதிர்க்கட்சி தலைவரையும், சஜித் பிரேமதாச சந்தித்து கலந்துரையாடவுள்ளார். இந்தப் பயணத்தின் போது அதிகாரபூர்வ நிகழ்வுகளிலும் சஜித் பிரேமதாச கலந்து கொள்வார் என தெரியவருகின்றது.










