“ ஐக்கிய மக்கள் சக்தியும், ஐக்கிய தேசியக் கட்சியும் ஒன்றிணைவது நல்ல விடயமாகும்.” –என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
இரு தரப்பினரும் ஒருமித்த அரசியல் கொள்கையில் இருந்தவர்கள், தற்போதும் அதே கொள்கையுடன் பயணிப்பவர்கள். எனவே, அவர்கள் இணைவது ஜனநாயக அரசியலுக்கு நல்லது எனவும் நாமல் ராஜபக்ச கூறினார்.
அதேவேளை, அரசாங்கத்தின் காலை வாருவதற்கு நாம் முற்படவில்லை .மாறாக தமது காலை தாமே வாரிக்கொள்ளும் வகையிலேயே அரசாங்கத்தின் செயல்பாடு உள்ளது எனவும் நாமல் சுட்டிக்காட்டினார்.










