புதிய அரசமைப்பு அவசியம்: மாகாணசபைத் தேர்தலும் வேண்டும்

புதிய அரசமைப்பு உருவாக்கம், மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்குரிய அழுத்தம் மற்றும் காணி உரிமைக்காகக் குரல் கொடுத்தல் உள்ளிட்ட பிரதான விடயங்களில் ஒருங்கிணைந்து செயல்படவே தமிழ் பேசும் கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

இது அரசியல் மற்றும் தேர்தல் கூட்டணி அல்லவெனவும், ஒரு பொது மேடை எனவும் அவர் கூறினார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சி, ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், தமிழ் முற்போக்குக் கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியவற்றின் தலைவர்களும், பிரதிநிதிகளும் கொழும்பில் நேற்று கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தினர்.

இதன்போது மனோ கணேசன் மேலும் கூறியவை வருமாறு:

“இது அரசியல் அல்லது தேர்தல் கூட்டணி அல்ல; ஒரு பொது மேடையாகும். எமது தாய்மொழி தமிழ், நாம் இலங்கையர்கள். எனவே, இது இனவாதத்திற்கு எதிரான கூட்டணியாகும். மாறாக, இதுவொரு இனவாதக் கூட்டணி கிடையாது.

சமத்துவமாக, சந்தோஷமாக, அதிகாரங்களைப் பகிர்ந்துகொண்டு வாழ்வது பற்றித்தான் இந்த பொது மேடை எடுத்து இயம்பவுள்ளது.

யுத்தம் முடிவடைந்திருந்தாலும், அது ஏற்படுவதற்குரிய அடிப்படைப் பிரச்சினைகளுக்கு இன்னும் தீர்வு கிடைக்கவில்லை. சிங்கள சகோதரர்கள் தொடர்பில் எமக்கு ஒரு புரிதல் உள்ளது. அதேபோல, எம்மைப் பற்றிய புரிதல் அவர்களுக்கும் ஏற்பட வேண்டும்.

அரசியல் அதிகாரப் பகிர்வு, நிர்வாக அதிகாரப் பகிர்வு, வளப் பகிர்வு, மொழி உரிமை என்பனதான் உண்மையான சமத்துவமாகும். இவை இன்றிக் சமத்துவம் பற்றிப் பேசுவதில் எவ்வித பயனும் இல்லை.

நாட்டில் புதிய அரசியலமைப்பு ஒன்று இயற்றப்பட வேண்டும். அதற்குரிய பணிகள் உடனடியாக முன்னெடுக்கப்பட வேண்டும். அத்துடன், நீண்டகாலமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள மாகாணசபைத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும்.

வடக்கு, கிழக்கில் நிலவும் காணிப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும். அதேபோல, மலையக மக்களுக்கு வாழும் உரிமையோடு, அவர்களின் வாழ்வாதாரத்திற்குரிய காணி உரிமையும் வழங்கப்பட வேண்டும்.”என்று மனோ கணேசன் வலியுறுத்தினார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles