56,000 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்குமேல் பெற்று சித்தி

56,000 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்குமேல் பெற்று சித்தி

2026 தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளுக்கமைய 56 ஆயிரம் மாணவர்கள் மாவட்ட ரீதியிலான வெட்டுபுள்ளிகளுக்கு மேல்பெற்று சித்தியடைந்துள்ளனர்.

அதாவது பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 19.32 சதவீதமானோர் வெட்டுபுள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளனர்.

பகுதி ஒன்றில் 35 புள்ளிகள், பகுதி இரண்டில் 35 புள்ளிகள் என 70 புள்ளிகளுக்கு மேல் எடுத்து சித்தியடைந்த மாணவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 13 ஆயிரத்து 287 ஆகும். இது 73.58 சதவீதமாகும்.

சிங்கள மொழியில் குருணாகலை மாவட்டத்தை சேர்ந்த மாணவரொருவர் 193 புள்ளிகளைப் பெற்றுள்ளார். இதுவே அதிகூடிய புள்ளியாகும்.

Related Articles

Latest Articles