கம்பளை, மில்லகாமுல பகுதியில் சட்டவிரோதமான முறையில் கள்ளு விற்பனையில் ஈடுபட்டுவந்த நபரொருவரை கம்பளை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், அவரிடமிருந்து 65 கள்ளு போத்தல்களையும் கைப்பற்றியுள்ளனர்.
மில்லகாமுல பகுதியில் வசிக்கும் 41 வயதுடைய ஆணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் எனவும், இவர் சட்டவிரோதமான முறையில் கள்ளு தயாரித்து விற்பனை செய்துள்ளார் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கம்பளை பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் குற்றத்தடுப்பு பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் கோணவல தலைமையிலேயே குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
பொலிஸ் உத்தியோகத்தர்களான சரத் (45154), கருணாதிலக்க (46850), தர்மரத்தின (15780), அரிச்சந்திர (52147) மிஸ்க்கின் (65885), சுதாகரன் (80562) ஆகியோரும் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் பங்கேற்றனர்.
கம்பளை நிருபர் – லாவண்யா
