கொரோனா தடுப்பூசிகளை வழங்குவதில் மலையக பெருந்தோட்ட பகுதிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச் செயலாளரும் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான சோ. ஸ்ரீதரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது :
“கொவிட்- 19 ஆரம்பித்த காலம் தொடக்கம் முழு நாடும் முடங்கிய போதும் மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தமது வழமையான தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இதன் காரணமாக நாட்டின் பொருளாதார துறைக்கும் பேருதவியாக இருந்தது.
இவ்வாறானதொரு நிலையில் மலையக பெருந்தோட்ட பகுதிகளில் குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் உள்ள தோட்டப் பகுதிகளில் நாளுக்கு நாள் கொரோணா தொற்றாளர்கள்அதிகரித்து வருகின்றனர்.
இதனால் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட தொழிலாளர்களும் எனையவர்களும் பாதிப்படைந்துள்ளனர். எனவே இந்த நிலைமையைக் கருத்திற்கொண்டு நுவரெலியா மாவட்ட பெருந்தோட்ட பகுதிகளிலும் ஏனைய மாவட்ட பெருந்தோட்ட பகுதிகளிலும் கொரோனா தடுப்பூசிகளை வழங்குவதில் சுகாதார அமைச்சு முன்னுரிமை வழங்க வேண்டும்.” – என்றார்.
