அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை தொடர்பில் நாடாளுமன்றத்தில் இரு நாட்கள் விவாதம் நடத்தப்படவுள்ளது.
இதன்படி ஏப்ரல் 6, 7 ஆம் திகதிகளில் விவாதத்தை நடத்ததுவற்கான அனுமதியை ஆளுங்கட்சி வழங்கியுள்ளது.
நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான குழு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று கூடியது. இதன்போதே மேற்படி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை கடந்தவாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.