நாட்டிலுள்ள தபாலகங்களும், உப தபாலகங்களும் இன்றும், நாளையும் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை திறக்கப்பட்டிருக்கும் என்று தபால்மா அதிபர் தெரிவித்துள்ளார்.
மே மாதத்துக்கான ஓய்வூதியம், விவசாயிகள், மீனவர்களுக்கான ஊக்குவிப்பு கொடுப்பனவு, முதியோர் கொடுப்பனவு உள்ளிட்ட கொடுப்பனவுகளை மாத்திரமே தபாலகங்கள் திறக்கப்பட்டிருக்கும்.
நாட்டில் தற்போது பயணக்கட்டுப்பாடு அமுலில் உள்ளதால், மேற்படி கொடுப்பனவுகளை பெறவேண்டியவர்கள், தமது ஓய்வூதிய அடையாள அட்டை, விவசாயம், மீனவர் ஓய்வூதிய அடையாள அட்டை, முதியோர் மற்றும் பொதுசன கொடுப்பனவுகளுக்காக வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டைகளைப் பயன்படுத்தி தபாலகங்களுக்கு வரமுடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து சிரமங்களால் ஏதேனும் அலுவலகங்கள் திறக்கப்படாவிட்டால், 1950 துரித அழைப்பு இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியுமெனவும் எனவும் தபால்மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
