கிணற்றிலிருந்து கணவன், மனைவியின் சடலங்கள் மீட்பு

முல்லைத்தீவு – மல்லாவி. அனிஞ்சியன்குளம் பகுதியில், கிணற்றில் இருந்து, கணவன், மனைவியின் சடலங்கள், இன்று (27) காலை மீட்கப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதே இடத்தை சேர்ந்த றஞ்சன் பிரதீபன் (வயது 31), பிரதீபன் மாலினி (வயது 27) ஆகியோரே, இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

குறித்த இருவரும் திருமணத்துக்க முன்னர் பிரதேச வெதுப்பகம் ஒன்றில் கடமையாற்றிக் கொண்டிருந்த நிலையில் திருமணம் செய்துள்ளனர் எனவும். இவ்விருவரும் திருமணமாகி 10 மாதங்களே ஆகின்றன எனவும், மல்லாவி பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்கள், கிணற்றில் விழுந்து உயிரிழந்து இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.

Related Articles

Latest Articles