ஹிஷாலினிக்கு நீதி கோரி தொடர்கிறது போராட்டம்

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் வேலைசெய்த நிலையில் தீக்காயங்களுடன் சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்த டயகம சிறுமியின் மரணத்துக்கு நீதி கோரி கண்டன பேரணியும், கவனயீர்ப்பு போராட்டமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கம்பளை புப்புரஸ்ஸ நியூ பொரஸ்ட் தோட்ட மக்கள் ஒன்றிணைந்தே நேற்று இதற்கான நடவடிக்கையில் இறங்கினர்.

தோட்ட பெண்கள், சிறார்கள், தோட்டத் தலைவர்கள், ஆலய குருக்கள் என பலரும் இணைந்து பேரணியாக போராட்டத்தை ஆரம்பித்தனர். ஹிஷாலினிக்கு நீதி வேண்டும், குற்றவாளிகள் தப்பவே கூடாது, இனியும் இவ்வாறு நடைபெறக்கூடாது எனவும் கோஷம் எழுப்பினர்.

Related Articles

Latest Articles