இந்தோனேஷியாவில் பாரிய நிலநடுக்கம்! இலங்கைக்கு சுனாமி ஆபத்து இல்லை!!

இந்தோனேஷியாவில் தெற்கு சுமாத்ரா தீவில் ஏற்பட்ட பூகம்பத்தால் இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்று வளிமண்டளவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம் அறிவித்துள்ளது.

இந்தோனேஷியாவின் தெற்கு சுமாத்ரா தீவில் பாரிய நில அதிர்வு ஒன்று உணரப்பட்டுள்ளதாக அமெரிக்க புவிசரிதவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இலங்கை நேரப்படி இன்று அதிகாலை 3.59 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் 6.9 ரிக்டர் அளவில் உணரப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.  கடற்பரப்பில் இருந்து 163 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளது.

எனினும், இந்த நில அதிர்வால் இலங்கைக்கு எந்த ஆபத்தும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் வளிமண்டளவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம் விடுத்துள்ள அறிக்கை வருமாறு,

Related Articles

Latest Articles