மத்திய மாகாண ஆண் ஆழகர் போட்டிகளில் சுமார் நான்கு ஆண்டுகளுக்கு பின் நுவரேலியா மாவட்டத்தை சேர்ந்த மூன்றுதமிழ் இளைஞர்கள் பதக்கங்களை பெற்றுள்ளனர் .
நானுஒயாவை சேர்ந்த சங்கர்கனேஸ் 75 கிலோ எடை பிரிவில் முதலாம் இடத்தை பெற்று தங்கப்பதக்கத்தை பெற்றுக்கொண்டுள்ளார் அதேபோன்று கொட்டகலையை சேர்ந்த சசிதரன் இரண்டாம் இடத்தை பெற்று வெள்ளி பதக்கத்தையும் பெற்றுக்கொண்டுள்ளார்
மேலும் நானுஒயாவை சேர்ந்த ச.சசிதரன் முதல் முறையாக இந்த போட்டிகளில் பங்குபற்றி 70 கிலோ எடை பிரிவில் மூன்றாம் இடத்தைபெற்று வெள்ளி பதக்கத்தை சுவீகரித்துக்கொண்டார்.
மலையகத்திற்கு பெருமை சேர்த்த இந்த மூன்று இளைஞர்களுக்கும் , இவர்களுக்கு முன்மாதிரியாக இருந்து இவர்களுக்கு தேவையான பயிற்சிகளை அளித்த மாதவன் ராஜ்குமார் என்பது குறிப்பிடத்தக்கது.
டி சந்ரு