பொதுத்தேர்தலில் பதுளை மாவட்டத்தில் போட்டியிடும் சுயேச்சைக் குழுவொன்றின் ஆதரவாளர்கள் ஆறு பேர் தேர்தல் சட்டவிதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டின் பேரில்,கொஸ்லந்தை பொலிஸாரால் இன்று (07-07-2020) கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், கைதானவர்கள் பயணித்த வேன் ஒன்றையும், 346 பிரச்சார போஸ்டர்கள், பிரச்சார கையேடுகள் 253 ஆகியவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
ஆகஸ்ட் 5 ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் பதுளை மாவட்ட சுயேச்சைக் குழுவினரை ஆதரவிக்கும் வகையிலேயே மேற்படி பிரச்சார போஸ்டர்கள், பிரச்சாரக் கையேடுகள் மீட்கப்பட்டனவென்பதும் குறிப்பிடத்தக்கது.
கைதுசெய்யப்பட்டவர்கள் ஆறுபேர் மீது,தேர்தல் சட்டவிதிகள் மீறப்பட்ட குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
இவர்கள் விசாரணைகளின் பின்னர்,பண்டாரவளை மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவரென்று,கொஸ்லந்தைபொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ரட்ணசிரி பண்டார தெரிவித்தார்.
எம். செல்வராஜா, பதுளை