அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு எதிரணியைச்சேர்ந்த 10 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளிக்கவுள்ளனர் என ‘மௌபிம’ என்ற சிங்கள வாரஇதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இவர்கள் இரு அடிப்படையில் ஆளுங்கட்சிக்கு ஆதரவு வழங்கவுள்ளனர் என சிரேஷ்ட அமைச்சரொருவரை மேற்கோள்காட்டி குறித்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி 20 வாக்கெடுப்புக்கு விடப்படும்போது ஒரு குழு ஆளுங்கட்சியுடன் இணையும் எனவும், மற்றைய தரப்பு எதிரணியில் இருந்தவாறே அரசின் திட்டங்களுக்கு ஆதரவு வழங்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.