அடுத்த பொதுத்தேர்தலின்போது எந்தவொரு கட்சியாலும், ஆட்சி அமைப்பதற்கான அறுதிப்பெரும்பான்மையை (113) பெறமுடியாமல் போகும் – என்று நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
எனவே, கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான சாத்தியமே உருவாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியால் இனி மீண்டெழ முடியாது எனவும் விமல் வீரவன்ச குறிப்பிட்டார்.
