இருண்டது ‘மோசடி மோகினி’ திலினியின் வீடு!

பாரிய நிதி மோசடியில் ஈடுபட்டு விளக்கமறியலில் தடுத்துவைக்கப்பட்டுள்ள திகோ குழும உரிமையாளர் திலினி பிரியமாலியின் வீட்டில் நேற்று முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

மின்சார சபையை மேற்கோட்காட்டி இந்தச் செய்தி இன்று வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த 4 மாதங்களாக நிலுவையில் உள்ள மின்கட்டணத்தைச் செலுத்தாமையே இதற்குக் காரணம் என்று அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த மின் கட்டண தொகை கிட்டத்தட்ட நான்கரை இலட்சம் ரூபா எனவும் குறிப்பிடுகின்றது.

வத்தளை, அவெரிவத்தை எட்வர்ட் ஒழுங்கையில் திலினி பிரியமாலி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் வாடகை அடிப்படையில் வசித்து வந்த வீட்டிலேயே மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles