சப்ரகமுவ மாகாணத்தில் நேற்றுவரை (10) கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்கள் 8 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். இவர்கள் 8 பேரும் பிரான்ண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலையின் கொரோனா வைரஸ் தொற்றுக் குழுமத்தைச் சேர்ந்தவர்கள்.
இவர்கள் றம்புக்கனை வைத்தியசாலையில் அமைக்கப்பட்டுள்ள விசேட கொரோனா வைத்திய சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக இரத்தினபுரி கேகாலை வைத்திய துறை உயர் அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.
இதற்கிணங்க இரத்தினபுரி மாவட்டத்திலிருந்து கிரியெல்ல எல்லாவள பிரதேசங்களை சேர்ந்த இரண்டு நோயாளர்களும் கேகாலை மாவட்டத்தில் இருந்து வரகாபொல பிரதேசத்திலிருந்து 3 பேரும் ருவன்வல்ல யட்டியாந்தோட்டை கேகாலை ஆகிய பிரதேசங்களிலிருந்து தலா ஒவ்வொரு நோயாளர்களும் இனங்காணப்பட்டுள்ளதால் இவர்களும் கொரோனா விசேட வைத்திய சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இரத்தினபுரி மாவட்ட தொற்று நோய்த்தடுப்புப் பிரிவின் வைத்திய அதிகாரி லக்மால் கோணார மற்றும் கேகாலை மாவட்டத்தின் தொற்று நோய் தடுப்புப் பிரிவின் வைத்திய அதிகாரி குமார் விக்ரமசிங்க ஆகியோர் நேற்று தெரிவித்தனர்.