மலையக எழுச்சி பயணம் முன்னெடுப்பு

தலைமன்னாரிலிருந்து, மாத்தளை வரையான ‘மலையக மக்களின் ‘எழுச்சி’ பயணத்தின் 2 ஆவது நாள் பாத யாத்திரையும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

மலையக தமிழர்களுக்கும் சம உரிமைகள் வழங்கப்படவேண்டும், காணி உரிமை அவசியம், பெருந்தோட்டத் தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்க வேண்டும் என்பன உட்பட 10 பிரதான கோரிக்கைகளை முன்வைத்து ‘மலையக எழுச்சி பயணம்’ நேற்று ஆரம்பமானது.

குறித்த பாத யாத்திரை ஆகஸ்ட்12 ஆம் திகதி மாத்தளையை வந்தடையவுள்ளது.

இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றம், சிவில் அமைப்புகள் மற்றும் மலையக சமூகம்சார் செயற்பாட்டாளர்களை உள்ளடக்கிய  “மாண்புமிகு மலையக மக்கள்” கூட்டிணைவினால் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Related Articles

Latest Articles