2024 ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் முன்வைக்கப்படவுள்ள நிலையில், ‘பட்ஜட்’ கூட்டத்தொடர் முடிவடைந்த பின்னர் தெற்கு அரசியலில் அதிரடி மாற்றங்கள் இடம்பெறவுள்ளன என்று அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
2024 ஆம் ஆண்டு தேர்தல் வருடம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வேட்பாளர் தேர்வு, அரசியல் கூட்டணி, தொகுதிகளை பலப்படுத்தல் என தேர்தல் காலத்துக்கே உரித்தான சம்பவங்கள் தற்போதிலிருந்தே அரங்கேறிவருகின்றன.
பாதீட்டை நிறைவேற்றிக்கொள்வதற்கு தமது கட்சியின் ஆதரவு அவசியம் என்பதால் தம்மால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு ஜனாதிபதிக்கு மொட்டு கட்சி அழுத்தம் கொடுக்க ஆரம்பித்துள்ளது. ஜனாதிபதியை அண்மையில் நேரில் சந்தித்து பஸில் இது தொடர்பில் எடுத்துரைத்துள்ளார் என தெரியவருகின்றது.
இவ்வாறு மொட்டு கட்சி அடம்பிடித்துக்கொண்டிருந்தால் பாதீட்டு கூட்டத்தொடர் முடிவடைந்த பின்னர், பொதுத்தேர்தலை நடத்துவதற்கான அறிவிப்பை ஜனாதிபதி விடுக்ககூடும் என சிலர் கருதுகின்றனர்.
இவ்வாறு பொதுத்தேர்தலை முன்கூட்டியே நடத்தினால் அதன் பெறுபேறுகளை வைத்துக்கொண்டு, அரசியல் நகர்வுகளைக் கையாண்டு, தனது ஜனாதிபதி பதவியை தக்க வைக்கும் வகையில் ரணில் வியூகம் வகுகக்கூடும் என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அதேபோல கட்சி தாவல்களும் இடம்பெறவுள்ளன.
