புகையிரதம் ஒன்று தடம் புரண்டதால், கடலோரப் பாதைக்கான புகையிரத போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
மஹவயில் இருந்து மொரட்டுவை நோக்கி பயணித்த புகையிரதம், கொள்ளுப்பிட்டி பகுதியில் தடம் புரண்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று (27) காலை 8 மணி அளவில் புகையிரதம் தடம் புரண்டதால், கரையோரப் பாதையில் ஒரு பாதையில் மாத்திரமே புகையிரத சேவை இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.
புகையிரதம் தடம் புரண்டதன் காரணமாக புகையிரத பாதையும் சேதமடைந்துள்ளதாகவும், புகையிரத பாதையை சரி செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
