உலக உணவு பாதுகாப்பு அமைப்பால் வழங்கப்பட்ட நிவாரண பொருட்கள், மோரார் மற்றும் தேரேசிய ஆகிய தோட்டப் பகுதியில் உள்ள மக்களுக்கு கிடைக்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (27) புதன் கிழமை தேரேசியா தோட்ட தேயிலை தொழிட்சாலை முன்பாக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

” விதவைகள், ஊனமுற்றோர் இருக்கின்றனர். அவர்களுக்குகூட நிவாரணம் வழங்கப்படவில்லை. உலர் உணவு வழங்கும் விடயத்தில் பாரபட்சம் காட்டப்படுகின்றது என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 300 இற்கும் மேட்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்த விடயம் தொடர்பில் பிரதேசத்திற்கு பொறுப்பான அபிவிருத்தி உத்தியோகத்தரை தொடர்பு கொண்டு வினவியபோது,
” உலர் உணவு பொருட்களானது உலக உணவு பாதுகாப்பு திட்டத்தால் வழங்கப்பட்டுள்ளது. இதில் பெண் தலைமைத்துவம் கொண்ட குடும்பம், சிறுநீரக நோயாளர்கள் , ஊனமுற்றவர்கள், இருதய நோயாளர்கள் ஆகியோருக்கே வழங்கப்படுகின்றது. இதற்கான பெயர் பட்டியல் தனியார் நிறுவனத்தின் ஊடாக கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பெறப்பட்டு , உரியவர்களை கொழும்புக்கு அழைத்து உறுதி படுத்திய பின்னரே உலர் உணவு பொருட்கள் வழங்கப்படுகின்றது.” – என்றார்.
பொகவந்தலாவ நிருபர் – சதீஸ்
