காசல்ரீ நீர் தேக்கத்துக்கு நீரேந்தி செல்லும் பொகவந்தலாவ கெசல்கமுவ ஓயாவை அகலப்படுத்தி – சுத்தப்படுத்தும் பணி இன்று புதன் கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும், நீர் வளங்கள் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டைமானின் ஆலோசனைக்கமைய , இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும் நுவரேலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மருதப்பாண்டி இராமேஸ்வரனால் இத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதற்காக 14 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

பொகவந்தலாவ கில்லார்னி பாலம் தொடக்கம் பொகவந்தலாவ டியன்ஸின் பாலம் வரை கெசல்கமுவ ஓயா சுத்தப்படுத்தும் பணியின் முதற் கட்டமாக 1.6 கிலோ மீற்றர் தூரம் 4 மில்லியன் ரூபா செலவில் சுத்தப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.
இதொகாவின் பிரதித் தலைவரும், மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கணபதி கனகராஜ், நோர்வூட் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் ரவி குழந்தைவேல் என பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
