இலங்கை சிறார்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு கடத்தல் – விசாரணை தீவிரம்

வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த சிறார்கள் மலேசியா ஊடாக ஐரோப்பிய நாடுகளுக்கு கடத்தப்பட்டுள்ள விவகாரம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது என்று மகளிர் மற்றும்
சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” எமது நாட்டில் உள்ள 13 சிறார்கள் மலேசியாவுக்கு கொண்டுசெல்லப்பட்டு அங்கிருந்து பல நாடுகளுக்கு விற்கப்பட்டுள்ளனர். இது தொடர்பில் உடன் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு
குடிவரவு, குடியகல்வு திணைக்களம் மற்றும் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை ஆகியவற்றுக்கு இன்று (நேற்று) பணிப்புரை விடுத்துள்ளேன்.” – என்வும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

இலங்கையில் உள்ள சிறார்கள் மலேசியா ஊடாக பிற நாடுகளுக்கு அனுப்பப்படும் ஆட்கடத்தல் வியாபாரம் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடு சம்பந்தமாக சிஐடியினர் முன்னெடுத்த விசாரணைகளில் சில தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

குடிவரவு, குடியகல்வு திணைக்கள ஆணையாளர் நாயகத்தால் முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாட்டுக்கமையவே இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

விசாரணைகளின் பிரகாரம் வடக்கு , கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த 18 வயதுக்கு குறைவான சிறார்கள் மலேசியாவுக்கு அனுப்படுகின்றனர் என தெரியவந்துள்ளது.

மலேசியாவுக்கு செல்வதற்காக சட்டப்பூர்வமான கடவுச்சீட்டுகளே பயன்படுத்தப்படுகின்றன எனவும், மலேசியாவில் வைத்தே போலி கடவுச்சீட்டு தயாரிக்கப்பட்டு, பிரான்ஸ், பிரிட்டன் போன்ற நாடுகளுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றனர் என தெரியவந்துள்ளது.

இவ்வாறு 13 சிறார்கள் இதுவரை மலேசியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இடைத்தரகர்கள் இதன் பின்புலத்தில் செயற்பட்டுள்ளனர் எனவும் தெரியவந்துள்ளது. மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன .

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles